2.ஏனக் குருளைக்கு அருளியது

முன்னொரு காலத்தில் வேளாளர் குலத்திற் பிறந்த சேனைத்தலைவன் ஒருவனுக்குப் பன்னிரண்டு பிள்ளைகள் பிறந்து சிறப்புற வளர்ந்து வரும்போது, சேனைத்தலைவனும் அவன் மனைவியும் இறந்துபோக, பன்னிரு பிள்ளைகளும் போற்றுவாரின்றி, நாட்டைவிட்டு வேற்று நாட்டுக்குச் சென்று காடுகளைத் திருத்தி வயிறு வளர்த்து வந்தார்கள். ஒரு நாள், அந்தக் காட்டில் தவம் செய்துவந்த ஒரு முனிவனைப் பார்த்துச் சிரித்து ஏளனம் செய்தார்கள்.  முனிவன் சீற்றம்…

Read More

1.அடிமுடி தேடியது

திருமாலும் பிரம்மனும் சிவத்தின் அடியையும் முடியையும் தேடி அவமானமடைந்த கதையை முதலில் திருஞானசம்பந்தர் திருமுறைகளில்தான் காண்கின்றோம். திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருப்பதிகம் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குவது. அதன் ஒன்பதாவது பாடலில் இக்கதையைக் கூறுகிறார். படைப்புக் கடவுளாகிய பிரம்மனுடைய நாட்கள் ஒவ்வொன்றும், தேவர்கள் ஆண்டில் 12,000 ஆண்டுகள் கொண்ட பகற்பொழுதும், அதே அளவுள்ள இராப்பொழுதும் கொண்டதாகும்.  தேவர்கள்…

Read More

108 சிவன் போற்றி

விநாயகர் மலரடி! போற்றி போற்றி!நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவாதென் நாடு உடைய சிவனே, போற்றி!எந்நாட்டவா்க்கும் இறைவா, போற்றி!காவாய் கனகத் திரளே போற்றி!கயிலை மலையானே போற்றி போற்றி!வெற்றி வேல் முருகனே! போற்றி போற்றி!அம்மை அப்பனே! போற்றி போற்றி! இது ஒரு பரம சிவனை (அல்லது ஈசனை) புகழும் அழகிய தமிழ் போற்றி மாலை…

Read More

63. விறன்மிண்ட நாயனார்

சேரநாட்டில் செங்குன்றூர் என்ற ஊரின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கியவர் விறன்மிண்டர். சிறந்த சிவபக்தர். அடியவர்பால் அளவிறந்த பற்றுடையவர். அடியவருக்கு என்று எதையும் செய்யும் அன்பர். பற்றுகளைத் துறந்து வாழ்பவர். அவர் தன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டுக் கோவில்களில் வழிபாடு செய்து திருவாரூரை அடைந்தார். தியாகேசப் பெருமானின் திருவடியை விட்டு நீங்கா மனம் கொண்டார்.…

Read More

62. வாயிலார் நாயனார் (தபோதனர்)

சென்னை மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் தபோதனர் பிறந்தார். வழிபாடு இருவகை. புறவழிபாடு. அகவழிபாடு. அகவழிபாடு இல்லாமல் புறவழிபாடு பயனில்லாதது. அந்தர் யாகம் எனும் அகவழிபாடில்லாத சிவபூசை சிறப்பாகாது. இவரை வாயிலார் என்றும் கூறுவர். வாயிலார் அகவழிபாட்டிலே ஒன்றி நின்றவர். இறைவனை ஒருபோதும் மறவாமையாகிய மனக் கோவிலில் இருத்தி உணர்வு எனும் விளக்கேற்றி இடையறாத ஆனந்தத்தில் திளைத்து…

Read More

61. மெய்ப்பொருள் நாயனார்

சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார் மெய்ப்பொருள் நாயனாா். தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவில் உள்ள நடுநாட்டின் தலைநகர் திருக்கோயிலூர். சேதிநாடு என்ற பெயரும் உண்டு. அதை ஆண்ட மன்னர்கள் மலாடர்கள் எனப்பட்டனர். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையமான் குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். அவர்தம்…

Read More

60. மூர்த்தி நாயனார்

பாண்டிய நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார் மூர்த்தியார். இறைபற்று தவிர வேறு பற்று எதுவும் இல்லாதவர். லிங்கத்திருமேனிக்கு சந்தனக்காப்பு செய்து வழிபடுவது இவர் விருப்பமாகும். வடுக கருநாட்டு மன்னவன் மண் ஆசையால் மதுரைமீது படையெடுக்க மதுரை மன்னனால் ஆற்றல்மிக்க அந்த சேனையை எதிர்கொள்ளமுடியாமல் தோற்றான். கருநாட்டு மன்னன் சமண சமயம் சார்ந்தவன்.…

Read More

59. மூர்க்க நாயனார்

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் சென்னைக்கு அருகிலுள்ள திருவேற்காட்டில் பிறந்தார் மூர்க்கர். அதிற் சிவனடிமைத் திறத்தில் சிறந்து வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியில் இடைவிடாமற் கடைப்பிடித்து வந்தார்.…

Read More

58. முனையடுவார் நாயனார்

நீடுரில் வேளாண் குலத்தில் பிறந்தவர் முனையடுவார். முனை என்றால் போர் முனையாகும். பல போர் முனைகளுக்குச் சென்று பகைவரை வென்றதால் முனையடுவர் எனப்பட்டார். சிவபெருமானிடத்தில் மாறாத அன்பு கொண்டு உள்ளம் உருக வழிபடுவார். அன்பு நெறியுடன் வீரம் செறிந்து நின்றவர். போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர். பகைவர்களுடன் தோற்றவர் இவர்பால்…

Read More