காயத்திாி மந்திரம்

ஓம் பூர் புவ ஸ்வாஹ
தத் சவித்துர் வரேண்யம்
பர்கோ தேவச்ய தீமஹி
தியோ யோன ப்ரசோதயாத் !!!

காயத்திாி மந்திரம் கதை சுருக்கம்:
முன்னாள் ராஜா – விஸ்வாமித்ரர்:
விஸ்வாமித்ரர் முதலில் ஒரு சக்தி வாய்ந்த மன்னர் (ராஜா). ஆனால் அவரது ஆன்மீக விழிப்புணர்வு அவரை ஒரு மஹரிஷியாக ஆக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது. சத்ரியரான கௌசிக மன்னனுடைய நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. இதனை போக்க மகரிஷி வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண் வயிற்று பிள்ளையான நந்தினி என்ற பசுவை தன் நாட்டின் பஞ்சம் போக்க வேண்டி கௌசிக மன்னன் இரவல் கேட்கிறார்.
இருப்பினும் வசிஷ்டர் அதனை மறுத்துவிடவே, கோபமுற்ற கௌசிக மன்னன் வசிஷ்டர் மீது போர் தொடுத்து அதில் தோல்வியும் அடைகிறார்.

தபசு மூலம் கிடைத்த மந்திரம்:
இதனையடுத்து பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு பசுக்கள் கட்டுப்படும் என்றும், எனவே நீர் பிரம்மரிஷியானால் நந்தினி பசுவை தருகிறேன் என்றும் எடுத்துக்கூறினார்.
இருப்பினும் ஒரு சத்திரியனால் பிரமரிஷி பட்டத்தை இலகுவாக பெறமுடியாது என்று சுட்டிக்காடினார்.
வசிஷ்டரின் கருத்துக்களை செவிமடுக்காமல் கௌசிக மன்னன் தன் நாட்டு மக்களுக்காக அந்த பிரம்மரிஷி பட்டத்தை பெற்றுக்காட்டுவேன் என சவால் விடுத்து, ஒரு கள்ளி செடியின் முனையின் மேல் நின்று கடும் தவம் புரிகிறார். தொண்ணூறு வருடங்களாக கடுமையான தபசுகள் செய்த விஸ்வாமித்ரர், தெய்வீக ஞானத்தின் உச்சத்தைக் கண்டடைந்தார். அப்போதுதான் அவரால் காயத்ரி மந்திரம் உருவாக்கப்பட்டது என்று சில புராணக் குறிப்புகள் கூறுகின்றன.

காயத்ரி தேவியின் உருவாக்கம்:
இதனை கண்ட அன்னை சக்தி கௌசிக மன்னின் முன் தோன்றி தன் கோவிலில் உள்ள விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகும் என கூறி மறைகிறாள்.
சக்தியின் வாக்கினையடுத்து நான்கு வேதங்களின் பிறந்தநாள், அன்று சக்தி தேவியின் ஆலயம் சென்று பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைகிறார்.
ஆனால் எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன், தலை, இரண்டு கை மற்றும் கால்களையும் வைத்து அந்த விளக்கை ஏற்ற முனைகிறார்.

முடிவு:
தனது உடலையே திரியாக்கி விளக்கேற்றியதைக் கண்ட சக்தி அவரை விசுவாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்குகிறார்.
தனது உடலையே திரியாக்கி ஜோதியை மையமாக வைத்து தன் தவத்தின் போது கௌசிக மன்னன் தான் அறிந்த நான்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி கூறியதனால் இந்த மந்திரம் காயத்திரி மந்திரம் என அழைக்கப்படுகிறது.

விளக்கம்:
ஒரு சுருக்கமான அர்த்தம்:
“அந்த பரம தெய்வத்தின் ஞான ஒளியை நாம் தியானிக்கின்றோம். அது எங்கள் புத்தியை நல்வழியில் செயல்பட தூண்ட வேண்டும்.”

ஒவ்வொரு வரியின் விளக்கம்:
ஓம் பூர் புவ ஸ்வாஹ:
மூன்று உலகங்களை (பூ, புவ, ஸ்வர்) குறிக்கிறது.

பூர் – பூமி (உயிரின் நிலை)
புவ – மனம் மற்றும் உயிரின் இடைநிலை
ஸ்வஹ – ஆன்மீக உலகம், வானுலகம்
இவை மூன்றும் சேர்ந்து தெய்வத்தின் பரப்பலைக் குறிக்கின்றன.

தத் சவித்துர் வரேண்யம்:
தத் – அந்த (தெய்வத்தைக் குறிக்கும்)
சவித்துர் – சவிதா (சூரியனாகத் திகழும் கடவுள்)
வரேண்யம் – வணங்கத்தக்க, சிறந்த
அந்த சவிதா தேவனை வணங்கத்தக்கவனாக எண்ணுகிறோம்.”

பர்கோ தேவச்ய தீமஹி:
பர்கோ – ஞான ஒளி, ஆன்மீக ஒளி
தேவஸ்ய – அந்த தெய்வத்தின்
தீமஹி – நாம் தியானிக்கின்றோம்
“அந்த தெய்வத்தின் ஞான ஒளியை நாம் தியானிக்கின்றோம்.”

தியோ யோன ப்ரசோதயாத்:
தியோ – புத்திகள்
யோ – யார்
ந: – எங்களது
ப்ரசோதயாத் – தூண்டட்டும், வழிநடத்தட்டும்
“எங்களது புத்தியை அவர் நல்ல வழியில் தூண்டட்டும்.”

முழுமையான அர்த்தம்:
“ஓம், மூன்று உலகங்களையும் உள்ளடக்கிய அந்த பரம்பொருளை வணங்குகிறோம். அந்த சவிதா தேவனுடைய ஞான ஒளியை நாம் தியானிக்கின்றோம். அது எங்கள் புத்தியை நல்ல வழியில் தூண்டட்டும்.”

  • ஆன்மீக நோக்கம்:
  • இந்த மந்திரம் ஒரு ஞான வேண்டுகோள்.
  • நம் புத்தியை தெளிவாக, நல்வழியில் கொண்டு செல்லவும், தெய்வீக ஒளியை நம்முள் அனுபவிக்கவும் இது உதவுகிறது.
  • தினமும் இதனை ஜபிப்பது மன அமைதி, ஞான வளர்ச்சி, நற்கருத்துக்கள் போன்ற பலன்களை அளிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.