விநாயகா் 108 போற்றி
- ஓம் விநாயகனே போற்றி
- ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
- ஓம் அரச மரத்தடி அமர்ந்தவனே போற்றி
- ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
- ஓம் அமிர்த கணேசா போற்றி
- ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
- ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
- ஓம் ஆனை முகத்தோனே போற்றி
- ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
- ஓம் ஆதி மூலமே போற்றி
- ஓம் ஆனந்த உருவே போற்றி
- ஓம் ஆபத் சகாயா போற்றி
- ஓம் இமவான் சந்ததியே போற்றி
- ஓம் இடரைக் களைவோனே போற்றி
- ஓம் ஈசன் மகனே போற்றி
- ஓம் ஈகை உருவே போற்றி
- ஓம் உண்மை வடிவே போற்றி
- ஓம் உலக நாயகனே போற்றி
- ஓம் ஊறும் களிப்பே போற்றி
- ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
- ஓம் எளியவனே போற்றி
- ஓம் எந்தையே போற்றி
- ஓம் எங்குமிருப்பவனே போற்றி
- ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
- ஓம் ஏழை பங்காளனே போற்றி
- ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
- ஓம் ஐயனே போற்றி
- ஓம் ஐங்கரனே போற்றி
- ஓம் ஒப்பிலாதவனே போற்றி
- ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
- ஓம் ஒளிமய உருவே போற்றி
- ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
- ஓம் கருணாகரனே போற்றி
- ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
- ஓம் கணேசனே போற்றி
- ஓம் கணநாயகனே போற்றி
- ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
- ஓம் கலியுக நாதனே போற்றி
- ஓம் கற்பகத்தருவே போற்றி
- ஓம் கந்தனுக்கு உதவியவனே போற்றி
- ஓம் கிருபாநிதியே போற்றி
- ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
- ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
- ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
- ஓம் குணநிதியே போற்றி
- ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
- ஓம் கூவிட வருவோய் போற்றி
- ஓம் கூத்தன் மகனே போற்றி
- ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
- ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
- ஓம் கோனே போற்றி
- ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
- ஓம் சடுதியில் வருபவனே போற்றி
- ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
- ஓம் சங்கடஹரனே போற்றி
- ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
- ஓம் சிறிய கண்ணோனே போற்றி
- ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
- ஓம் சுருதிப் பொருளே போற்றி
- ஓம் சுந்தரவடிவே போற்றி
- ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
- ஓம் ஞான முதல்வனே போற்றி
- ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
- ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
- ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
- ஓம் துயர் துடைப்பவனே போற்றி
- ஓம் தெருவெலாம் காப்பாவனே போற்றி
- ஓம் தேவாதி தேவனே போற்றி
- ஓம் தொந்தி விநாயகனே போற்றி
- ஓம் தொழுவோர் நாயகனே போற்றி
- ஓம் தோணியே போற்றி
- ஓம் தோன்றலே போற்றி
- ஓம் நம்பியே போற்றி
- ஓம் நாதனே போற்றி
- ஓம் நீறணிந்தவனே போற்றி
- ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
- ஓம் பழத்தை வென்றவனே போற்றி
- ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
- ஓம் பரம்பொருளே போற்றி
- ஓம் பரிபூரணனே போற்றி
- ஓம் பிரணவமே போற்றி
- ஓம் பிரம்மசாரியே போற்றி
- ஓம் பிள்ளையாரே போற்றி
- ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
- ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
- ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
- ஓம் புதுமை வடிவே போற்றி
- ஓம் புண்ணியனே போற்றி
- ஓம் பெரியவனே போற்றி
- ஓம் பெரிய உடலோனே போற்றி
- ஓம் பேரருளாளனே போற்றி
- ஓம் பேதம் அறுப்போனே போற்றி
- ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
- ஓம் மகிமையளிப்பவனே போற்றி
- ஓம் மகாகணபதியே போற்றி
- ஓம் மகேசுவரனே போற்றி
- ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
- ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
- ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
- ஓம் முக்கண்ணன் மகனே போற்றி
- ஓம் முக்காலம் அறிந்தவனே போற்றி
- ஓம் மூத்தோனே போற்றி
- ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
- ஓம் வல்லப கணபதியே போற்றி
- ஓம் வரம்தரு நாயகனே போற்றி
- ஓம் விக்னேஸ்வரனே போற்றி
- ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
- ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
விநாயகர் 108 போற்றி பயன்கள் :
சுருக்கமான பயன்கள்:
வினைகள் நீங்கும் – பாவங்கள், கர்ம விளைவுகள் தணிக்கின்றன.
வாழ்க்கை துன்பங்கள் அகலும் – மனஅமைதி, சங்கடங்கள் நீங்கும்.
அழகான வழிநடத்தல் கிடைக்கும் – கல்வி, வேலை, முயற்சிகளில் வெற்றி பெற உதவுகிறது.
ஐக்கியம் மற்றும் அமைதி – குடும்பத்தில் அமைதி நிலவுவதற்கும் ஒற்றுமைக்காகவும் உதவும்.
தொடக்கம் சிறப்பாக நடைபெறும் – எந்த ஒரு செயல் தொடக்கத்திலும் இப்புகழ்வணக்கம் அனுசரிப்பது சிறப்பானது.
மன சக்தி மற்றும் ஆன்மிக வளர்ச்சி – தியானத்திற்கு ஏற்றதாய் செயல்படுகிறது.
அழகு தமிழில் பக்தியை வளர்க்கும் – தமிழில் தெய்வப் புகழ்களை மனதிற்குள் ஆழமாக பதிக்க உதவும்.
விநாயகப் பெருமானை போற்றி துதிப்பதற்குரிய 108 போற்றி துதிகளை தினமும் காலை 6 மணி முதல் 9 மணிக்குள்ளான நேரத்தில் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து பாராயணம் செய்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். எந்த செயலை துவங்கினாலும் அது தடைகள், தாமதங்கள் இல்லாமல் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் முடியும்.