துக்க நிவாரண அஷ்டகம்:

மங்கள ரூபிணி மதியணி சூலினி
மன்மத பாணியளே;
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
சங்கரி சௌந்தரியே;
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்
கற்பக காமினியே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி;

கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்;
தானுறு தவஒளி தாரொளி மதியொளி
தாங்கியே வீசிடுவாள்;
மானுறு விழியால் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி!

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே;
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே;
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே
எழுந்தநல் துர்க்கையளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி!

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத்
தண்மணி நீ வருவாய்;
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக்
கண்மணி நீ வருவாய்;
பணபண பம்பண பறையொலி கூவிடப்
பண்மணி நீ வருவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி!

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியளே;
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
கொடுத்தநல் குமரியளே;
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற்
சக்தியெனும் மாயே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி!

எண்ணிய படிநீ யருளிட வருவாய்
எங்குல தேவியளே;
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்;
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி!

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
யென்றுநீ சொல்லிடுவாய்;
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமது தந்திடுவாய்;
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஓட்டிடுவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி!

ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி
ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி
ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி!

துக்க நிவாரணி காமாக்ஷி ஸ்துதி” (அல்லது ஒரு ஆழமான தேவீ ஸ்தோத்திரம்) — காமாக்ஷி தேவியின் கருணை, அழகு, ஆற்றல் மற்றும் துக்க நிவாரண சக்திகளை புகழ்ந்து பாடும் ஒரு மிக அழகான மற்றும் சக்திவாய்ந்த தமிழ்ச் செருகப்பட்ட பக்திப் பாடல் ஆகும்.

  • சுருக்கமான நன்மைகள்:
  • துக்க நிவாரணி” என்று பாடல்தோறும் அழைக்கப்படும் காமாக்ஷி, மனதின் துயரங்களைத் தீர்க்கும் சக்தியாக வணங்கப்படுகிறார்.
  • சங்கரி, கௌரி என தேவியின் பல வடிவங்களையும் போற்றுவதால், மனதில் பக்தி மற்றும் அமைதி ஏற்படுகிறது.
  • துர்க்கை வடிவமான சங்கரி, சூலம் வைத்த வடிவங்களுடன் வர்ணிக்கப்படுவதால், தீமைகள் விலகும்.
  • “சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி” என வர்ணிக்கப்படுவதால், பக்தருக்கு தைரியம் பெருகும்.
  • தேவியின் மகிமையை கொண்டாடும் ஒவ்வொரு வரியும், ஒரு ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும். இது உள் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
  • “அமுதம்” போலவும், “சூரிய ஒளி” போலவும் தேவியை வர்ணிப்பதால், உடல்-மனம் ஆரோக்கியம் மற்றும் நற்பலம் கிடைக்கும்.
  • குமரனையும், கணபதியையும் பெற்றவளாகவும், பர்வத புத்திரியாகவும் தேவியை போற்றுவதால், குடும்ப சாந்தியும் குழந்தைப் பேறும் வேண்டி பாடலாம்.
  • “எண்ணிய படி நீ அருளிட வருவாய்” என்று கூறும் பகுதி, ஸரணாகதி மூலம் தேவியின் அருள் பெற முடியும் என்பதை காட்டுகிறது.