58. முனையடுவார் நாயனார்
நீடுரில் வேளாண் குலத்தில் பிறந்தவர் முனையடுவார். முனை என்றால் போர் முனையாகும். பல போர் முனைகளுக்குச் சென்று பகைவரை வென்றதால் முனையடுவர் எனப்பட்டார். சிவபெருமானிடத்தில் மாறாத அன்பு கொண்டு உள்ளம் உருக வழிபடுவார்.
அன்பு நெறியுடன் வீரம் செறிந்து நின்றவர். போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர். பகைவர்களுடன் தோற்றவர் இவர்பால் வந்து வேண்டி நின்றால் நடுவு நிலையுடன் பொருள் பெற்று அவர்பால் பகைவரை எதிர்த்து வெற்று பெறுவார். அந்த பொருளைக் கொண்டு அடியார்க்கு உதவிகள் செய்து தொண்டு புரிந்தார். பல ஆண்டுகள் தொடர்ந்து சிவதொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.
இறைவன்: சோமநாதேஸ்வரர்
இறைவி : வேதநாயகி
தலமரம் : மகிழம்
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : திருநீடூர்
முக்தி தலம் : திருநீடூர்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி – பூசம்
முகவரி : அருள்மிகு சோமநாதேஸ்வரர் திருக்கோயில், திருநீடூர் – 609203.
மயிலாடுதுறை வட்டம்.