Skip to content
info@aanmigamalar.com
+91 9940300635
AAnmigamalar
  • விநாயகர்
    • ஒளவையாா் அகவல்
    • நக்கீரர் அகவல்
    • விநாயகர் அநுபூதி
    • விநாயகர் பதிகம்
    • விநாயகா் திருப்புகழ்
    • விநாயகா் 108 போற்றி
    • விநாயகர் கவசம்
  • சிவன்
    • 63 நாயன்மார்கள்
    • திருவாசகத்துள் வந்துள்ள புராண கதைகள்
    • 1008-சிவன்-போற்றி
    • 108 சிவன் போற்றி
  • முருகன்
    • கந்த குரு கவசம்
    • கந்தர் சஷ்டி கவசம்
    • பாம்பன் சுவாமிகள்
      • சண்முக கவசம்
      • குமாரஸ்தவம்
      • பகை கடிதல்
      • பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்
      • தெளத்தியம் (திருவடித் துதி)
      • சண்முக நாமாவளி
    • அறுபடை வீடு புராண கதைகள்
      • திருப்பரங்குன்றம்
      • திருச்செந்தூர்
      • பழனி
      • சுவாமிமலை
      • திருத்தணி
      • பழமுதிர்ச்சோலை
  • விஷ்ணு
    • திருப்பாவை பாசுரங்கள்
    • ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்
    • பால முகுந்தாஷ்டகம்
  • அம்பாள்
    • அம்பாள் போற்றிகள்
      • ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி
      • ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம்
      • அம்மன் தெம்மாங்கு பாடல்
      • காயத்திாி மந்திரம்
      • மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்
      • துக்க நிவாரண அஷ்டகம்:
      • அபிராமி அந்தாதி
  • சரஸ்வதி
    • சகலகலாவல்லி மாலை
    • சரஸ்வதி அந்தாதி
    • சரஸ்வதி 108 போற்றி
AAnmigamalar
  • விநாயகர்
    • ஒளவையாா் அகவல்
    • நக்கீரர் அகவல்
    • விநாயகர் அநுபூதி
    • விநாயகர் பதிகம்
    • விநாயகா் திருப்புகழ்
    • விநாயகா் 108 போற்றி
    • விநாயகர் கவசம்
  • சிவன்
    • 63 நாயன்மார்கள்
    • திருவாசகத்துள் வந்துள்ள புராண கதைகள்
    • 1008-சிவன்-போற்றி
    • 108 சிவன் போற்றி
  • முருகன்
    • கந்த குரு கவசம்
    • கந்தர் சஷ்டி கவசம்
    • பாம்பன் சுவாமிகள்
      • சண்முக கவசம்
      • குமாரஸ்தவம்
      • பகை கடிதல்
      • பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்
      • தெளத்தியம் (திருவடித் துதி)
      • சண்முக நாமாவளி
    • அறுபடை வீடு புராண கதைகள்
      • திருப்பரங்குன்றம்
      • திருச்செந்தூர்
      • பழனி
      • சுவாமிமலை
      • திருத்தணி
      • பழமுதிர்ச்சோலை
  • விஷ்ணு
    • திருப்பாவை பாசுரங்கள்
    • ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்
    • பால முகுந்தாஷ்டகம்
  • அம்பாள்
    • அம்பாள் போற்றிகள்
      • ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி
      • ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம்
      • அம்மன் தெம்மாங்கு பாடல்
      • காயத்திாி மந்திரம்
      • மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்
      • துக்க நிவாரண அஷ்டகம்:
      • அபிராமி அந்தாதி
  • சரஸ்வதி
    • சகலகலாவல்லி மாலை
    • சரஸ்வதி அந்தாதி
    • சரஸ்வதி 108 போற்றி
  1. Home
  2.  / விஷ்ணு  / 
  3. திருப்பாவை 23
விஷ்ணு
  • admin
  • 07 Jan 2025

திருப்பாவை 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

விளக்கம்:

எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு…என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.

Copyright © 2025. Powered by JPG DESIGNS.